காங்கிரஸ் ஊடுருவலை இயல்பாக்கியது, பாஜக அனுமதிக்காது : அமித் ஷா
நாட்டில் ஊடுருவல்களை காங்கிரஸ் கட்சி இயல்பாக்கியதாகவும், ஆனால் பாஜக இதனை ஒருபோதும் அனுமதிக்காது என அமித் ஷா பேசியது குறித்து..


நாட்டில் ஊடுருவல்களை காங்கிரஸ் கட்சி இயல்பாக்கியதாகவும், ஆனால் பாஜக இதனை ஒருபோதும் அனுமதிக்காது என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்) மூலம் நாட்டில் உள்ள ஊடுருவல்காரர்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள் என்றும் எஸ்.ஐ.ஆரின் முக்கிய நோக்கமே அவர்களை அதிகாரமிழக்கச் செய்வதுதான் எனவும் குறிப்பிட்டார்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பாரதிய ஜன மோர்ச்சா எனப்படும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் போராட்டங்கள் மற்றும் வன்முறை நிறைந்த மாநிலமாக அஸ்ஸாம் இருந்தது. ஆனால், போராட்டங்களில் ஈடுபட்டுவந்த அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி உள்ளிட்ட இயக்கங்களுடன் பாஜக அரசு ஒப்பந்தம் செய்தது. அதாவது, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு பாஜக அரசு செயல்பட்டது.
அஸ்ஸாமில் பாஜகவுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுங்கள். மாநிலத்தில் உள்ள ஊடுருவல்காரர்கள் முற்றிலும் வெளியேற்றப்படுவார்கள். ஊடுருவல்களை காங்கிரஸ் கட்சி இயல்பாக்குகிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை.
ஊடுருவலை அனுமதிப்பதன் மூலம் ஊழலையும் பிரிவினைவாதத்தையும் காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது. ஆனால், வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பணிகள் தொடர மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என அமித் ஷா பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...