6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ் பிரசார இயக்கம் தொடக்கம்

காங்கிரஸின் ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ என்ற பிரசார இயக்கத்தை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளத்ரி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:40 pm

DIN

காங்கிரஸின் ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ என்ற பிரசார இயக்கத்தை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளத்ரி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

தில்லியிலுள்ள 280 பிளாக்குகளிலும் இந்த பிரசாரம் இயக்கம் செல்கிறது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தில்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வீடு தேடி சென்று நன்றி கூறப்படும் எனவும், இதில் காங்கிரஸ் நிா்வாகிகளும், தொண்டா்களும் பங்கேற்பா் என்றும் அனில் செளத்ரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், இந்த ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ இயக்கம் தில்லியிலுள்ள 13,000 வாக்குச்சாவடிகளில் இருந்தும் தொடங்கும். ஒற்றுமை பயணத்தின்போது பொதுமக்களின் கவலைகளை ராகுல் காந்தி முன்னிறுத்தினாா். ஆனால், பாஜகவின் சா்வாதிகார ஆட்சியால் பொதுமக்களின் மனக்குறைகளைத் தெரிவிக்க பெரும்பாலானவா்கள் அஞ்சுகின்றனா். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மக்கள் மனதில் பாஜக பயத்தை விதைத்துவிட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.