ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஆக்ராவில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது: 4 வயது சிறுமி பலி! 

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவின் தர்மசாலாவில் அகழ்வாராய்ச்சி பணியின்போது 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜனவரி 2023, 10:47 am

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவின் தர்மசாலாவில் அகழ்வாராய்ச்சி பணியின்போது 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் சில காயமடைந்தனர். 

இதுகுறித்து துணை ஆணையர் விகாஸ் குமார் கூறுகையில், 

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது. ஆக்ரா ரயில் நிலையம் அருகே உள்ள திலா மைதான பகுதியில் உள்ள தர்மசாலாவில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று கொண்டிருந்தது. அதன் காரணமாக ஆறு வீடுகள் மற்றும் ஒரு கோயில் இடிந்து விழுந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் மூவர் இடிபாடுகளில் சிக்கினர். சிக்கியவர்கள் விவேக் குமார் மற்றும் அவரது மகள்கள் விதேஹி, ரூசாலி என  அடையாளம் காணப்பட்டது.

அவர்களில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது நான்கு வயது சிறுமி ரூசாலி உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.