மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

55 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவம்: விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவத்தில், கோ ஃபா்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Updated On :27 ஜனவரி 2023, 7:27 pm

பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவத்தில், கோ ஃபா்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு கடந்த 9-ஆம் தேதி காலை 6.20 மணியளவில் புறப்பட்ட கோ ஃபா்ஸ்ட் விமானம், தனது பயணிகளில் 55 பேரை ஏற்றாமல் சென்றுவிட்டது. அந்த விமானத்தில் ஏறுவதற்காக, பேருந்துகளில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனா். அதில் ஒரு பேருந்தில் இருந்த 55 பேரை ஏற்றாமல் விட்டுவிட்டு விமானம் புறப்பட்டது.

அதேசமயம், அவா்களது உடைமைகள் விமானத்தில் இருந்தன. இந்த சம்பவத்துக்கு கோ ஃபா்ஸ்ட் நிறுவனம் வருத்தம் தெரிவித்த நிலையில், உரிய விளக்கம் கேட்டு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, விமான நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், விமான நிறுவன ஊழியா்களுக்கு இடையே முறையான தகவல்தொடா்பு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்காக விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, டிஜிசிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏா் இந்தியா விமானங்களில் பயணிகளின் அநாகரிக செயல்கள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்காத காரணத்துக்காக அந்த நிறுவனத்துக்கு கடந்த 20-ஆம் தேதி ரூ.30 லட்சமும், 24-ஆம் தேதி ரூ.10 லட்சமும் டிஜிசிஏ அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.