ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

வீழ்ச்சியடைந்த அதானி குழுமப் பங்குகள்: நிதியமைச்சர் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி!

எல்ஐசி மற்றும் எஸ்பிஐ,  அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கி 78 ஆயிரம் கோடிகளை இழந்த பின்பும் மத்திய நிதியமைச்சரும், விசாரணை அமைப்புகளும் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

Published On :7 பிப்ரவரி 2024, 11:51 am IST

எல்ஐசி மற்றும் எஸ்பிஐ,  அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கி 78 ஆயிரம் கோடிகளை இழந்த பின்பும் மத்திய நிதியமைச்சரும், விசாரணை அமைப்புகளும் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதாகவும், இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் 4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸைச் சேர்ந்த ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். இருப்பினும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன. எல்ஐசி என்பது பொதுமக்களின் பணம். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகும் ஏன் எல்ஐசி அதானி குழுமத்தில் 300 கோடி முதலீடு செய்ய வேண்டும்.

இந்த ஆய்வறிக்கை வெளியான பிறகு எஸ்பிஐ பங்குகள் 54 ஆயிரம் கோடிகள் குறைந்துள்ளது. இருந்தும், ஏன் எஸ்பிஐ, அதானி குழுமத்தில் 225 கோடி முதலீடு செய்துள்ளது. எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்? இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் மத்திய நிதியமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும். நிதியமைச்சர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.