சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வீழ்ச்சியடைந்த அதானி குழுமப் பங்குகள்: நிதியமைச்சர் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி!

எல்ஐசி மற்றும் எஸ்பிஐ,  அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கி 78 ஆயிரம் கோடிகளை இழந்த பின்பும் மத்திய நிதியமைச்சரும், விசாரணை அமைப்புகளும் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2023, 8:27 pm IST

எல்ஐசி மற்றும் எஸ்பிஐ,  அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கி 78 ஆயிரம் கோடிகளை இழந்த பின்பும் மத்திய நிதியமைச்சரும், விசாரணை அமைப்புகளும் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதாகவும், இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் 4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸைச் சேர்ந்த ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். இருப்பினும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன. எல்ஐசி என்பது பொதுமக்களின் பணம். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகும் ஏன் எல்ஐசி அதானி குழுமத்தில் 300 கோடி முதலீடு செய்ய வேண்டும்.

இந்த ஆய்வறிக்கை வெளியான பிறகு எஸ்பிஐ பங்குகள் 54 ஆயிரம் கோடிகள் குறைந்துள்ளது. இருந்தும், ஏன் எஸ்பிஐ, அதானி குழுமத்தில் 225 கோடி முதலீடு செய்துள்ளது. எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்? இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் மத்திய நிதியமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும். நிதியமைச்சர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.