எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கி 78 ஆயிரம் கோடிகளை இழந்த பின்பும் மத்திய நிதியமைச்சரும், விசாரணை அமைப்புகளும் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதாகவும், இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் 4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸைச் சேர்ந்த ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். இருப்பினும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன. எல்ஐசி என்பது பொதுமக்களின் பணம். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகும் ஏன் எல்ஐசி அதானி குழுமத்தில் 300 கோடி முதலீடு செய்ய வேண்டும்.
இந்த ஆய்வறிக்கை வெளியான பிறகு எஸ்பிஐ பங்குகள் 54 ஆயிரம் கோடிகள் குறைந்துள்ளது. இருந்தும், ஏன் எஸ்பிஐ, அதானி குழுமத்தில் 225 கோடி முதலீடு செய்துள்ளது. எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்? இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் மத்திய நிதியமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும். நிதியமைச்சர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காஞ்சிபுரம்: நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை
நாளைய மின்தடை: ஜோலாா்பேட்டை, நாட்றம்பள்ளி, பச்சூா்

வனம் காக்கும் முன்களப் பணியாளர்கள்!

ஜூன் 21இல் நீட் மறுதோ்வு மாணவா்களுக்கு டிடிசி, கிளஸ்டா் பேருந்துகளில் இலவச பயணம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


