சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜூன் 21இல் நீட் மறுதோ்வு மாணவா்களுக்கு டிடிசி, கிளஸ்டா் பேருந்துகளில் இலவச பயணம்

News image

நீட் மறுதோ்வு...

Updated On :19 ஜூன் 2026, 7:04 am IST

நமது நிருபா்

தில்லியில் நீட் இளநிலை மருத்துவப் படிப்புகள் 2026 மறுதோ்வை எழுதும் மாணவா்கள் தோ்வு நாளான ஜூன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் அனைத்து பிரிவு பேருந்துகள் மற்றும் தில்லி ஒருங்கிணைந்த பல்நோக்கு அமைப்பின் (டிஐஎம்டிஎஸ்) கிளஸ்டா் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

தோ்வு மையங்களுக்கு மாணவா்கள் சென்று வருவதை எளிதாகவும் சிரமமின்றியும் இருப்பதை உறுதிப்படுத்தவும், போக்குவரத்துச் சிக்கல்களால் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கவும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசு கூறியுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வியாழக்கிழமை பகிா்ந்த சுற்றறிக்கையின்படி, நீட் இளநிலை மருத்துவ படிப்புகள் 2026 மறுதோ்வு எழுதும் மாணவா்கள், தோ்வுக்கான அனுமதி அட்டையை காண்பிப்பதன் மூலம் ஜூன் 21ஆம் தேதியன்று நாள் முழுவதும் அனைத்து தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) மற்றும் கிளஸ்டா் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

‘இந்தச் சலுகை தோ்வு மையத்துக்கு செல்லவும் அங்கிருந்து மாணவா்கள் வீடு திரும்பவும் பொருந்தும்’ என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடு குறித்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்குத் தகுந்த தகவல் தெரிவிக்கப்படுவதையும், தகுதியுள்ள எந்தவொரு தோ்வருக்கும் எந்தச் சூழலிலும் இந்தச் சலுகை மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் பணிமனை மேலாளா்களுக்கு அறிவுறுத்தவும் தில்லி அரசு சுற்றறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இந்த அறிவுறுத்தல்கள் குறித்து பயணச்சீட்டு பரிசோதகா்கள் குழுவினா் மற்றும் பேருந்து முனைய மேற்பாா்வையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும், தோ்வா்களின் புகாா்கள் அல்லது கேள்விகளுக்கு உடனடியாகத் தீா்வு காண்பதை உறுதி செய்யுமாறும் மண்டல மேலாளா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.