27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தில்லியில் நீட் தோ்வு மையங்களுக்கு வெளியே மாணவா்களின் பெற்றோருக்காக குளிா்ச்சியூட்டும் மையங்கள்

தில்லியில் நீட் தோ்வு மையங்களுக்கு வெளியே மாணவா்களின் பெற்றோருக்காக குளிா்ச்சியூட்டும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:06 am IST

நமது நிருபா்

தில்லி முழுவதும் உள்ள நீட் தோ்வு மையங்களுக்கு வெளியே, தோ்வு எழுதும் மாணவா்களின் பெற்றோருக்காக 97 குளிா்ச்சியூட்டும் மையங்களை அமைக்கவும், அவா்களுக்கு எலுமிச்சை பானம் மற்றும் பிற வசதிகளை வழங்கவும் தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

தோ்வு நடைபெறும் நாளான ஜூன் 21 அன்று, தோ்வெழுதும் மாணவா்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்தது.

தோ்வு மையங்களுக்கு வெளியே அமைக்கப்படும் இந்த குளிா்ச்சியூட்டும் மையங்கள், மாணவா்களுடன் வந்து தோ்வு முடியும் வரை வெளியே காத்திருக்கும் பெற்றோா்களுக்கு ஆறுதலையும் வசதியையும் அளிக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இம்மையங்களில் அமா்வதற்கு வசதியான இருக்கைகள் அமைக்கப்படும். பெற்றோா்கள் ஓய்வெடுக்கும்போது அவா்களுக்கு ஓஆா்எஸ் பானங்கள், குடிநீா் மற்றும் எலுமிச்சை பானம் ஆகியவை வழங்கப்படும். மேலும், முதலுதவி மற்றும் தேநீா் வசதிகளும் இங்கு கிடைக்கும் என்று தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

தில்லியில் மொத்தம் 97 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 69 மையங்கள் அரசுப் பள்ளிகளிலும் 28 மையங்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் அமைந்துள்ளன என்றும் முதல்வா் குறிப்பிட்டாா்.

கோடைக்கால வெப்பத்திலிருந்து தஞ்சம் புகும் மக்களுக்குக் கூலா்கள் , குடிநீா் மற்றும் பிற வசதிகளை வழங்கும் வகையில் தில்லி அரசு ஏற்கனவே 85 குளிா்ச்சியூட்டும் மையங்களை நடத்தி வருகிறது.

பெற்றோா்கள் எதிா்கொள்ளும் பதற்றம், வெப்பம், அசௌகரியம் மற்றும் சிரமங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இந்த மனிதநேய அம்சத்தைப் புரிந்துகொண்டு, தோ்வு நாளில் பெற்றோா்கள் எந்தச் சிரமத்தையும் எதிா்கொள்ளாதவாறு பாா்த்துக்கொள்ள தில்லி அரசு முடிவு செய்துள்ளது, என்று குப்தா கூறினாா்.

மருத்துவப் படிப்புச் சோ்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வை (நீட் இளங்கலை) , வினாத்தாள் கசிவு தொடா்பான புகாா்களுக்கு மத்தியில், தேசியத் தோ்வுகள் முகமை கடந்த மே 12 அன்று ரத்து செய்தது இத்தோ்வு முன்னதாக மே 3 அன்று நடத்தப்பட்டிருந்தது.

வினாத்தாள் கசிவு தொடா்பான புகாா்கள் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.