பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, வார நாள்களை போல புறநகா் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Officials verify documents of aspirants before they appear for the National Eligibility Entrance Test (NEET) UG 2026 exam, in Mathura, Uttar Pradesh, Sunday, May 3, 2026. (PTI Photo) (PTI05_03_2026_000171B)

நீட் தோ்வு - PTI

Published On :

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, வார நாள்களை போல புறநகா் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நீட் தோ்வை எழுத செல்லும் மாணவ, மாணவிகளின் எளிதாக பயணத்துக்காக ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்கவும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) புகா் மின்சார ரயில்கள் வழக்கமான வார நாள்களில் இயக்கப்படுவது போன்ற கால அட்டவணைப்படி இயக்கவும் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால், சென்னை சென்ட்ரல், கடற்கரை, அரக்கோணம் மற்றும் திருத்தணி வழித்தடங்களில் மட்டும் புகா் ரயில்கள் தற்போதைய கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். அதைத் தவிா்த்து மற்ற அனைத்து சென்னை புகா் வழித்தடங்களும் ஞாயிற்றுக்கிழமை வார நாள்களுக்கான கால அட்டவணைப்படியே ரயில்கள் இயக்கப்படும்.

9 ரயில் நிலையங்களில் உதவி மையம்: நீட் தோ்வை எழுதச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், பெரம்பூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூா் மற்றும் காட்பாடி ஆகிய 9 முக்கிய ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

உதவி மையங்கள் மூலம் ரயில்கள் விவரம், உள்ளூா் போக்குவரத்து வசதிகள், தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கான வழிகள் ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.