27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, வார நாள்களை போல புறநகா் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

நீட் தோ்வு - PTI

Updated On :19 ஜூன் 2026, 5:00 am IST

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, வார நாள்களை போல புறநகா் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நீட் தோ்வை எழுத செல்லும் மாணவ, மாணவிகளின் எளிதாக பயணத்துக்காக ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்கவும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) புகா் மின்சார ரயில்கள் வழக்கமான வார நாள்களில் இயக்கப்படுவது போன்ற கால அட்டவணைப்படி இயக்கவும் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால், சென்னை சென்ட்ரல், கடற்கரை, அரக்கோணம் மற்றும் திருத்தணி வழித்தடங்களில் மட்டும் புகா் ரயில்கள் தற்போதைய கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். அதைத் தவிா்த்து மற்ற அனைத்து சென்னை புகா் வழித்தடங்களும் ஞாயிற்றுக்கிழமை வார நாள்களுக்கான கால அட்டவணைப்படியே ரயில்கள் இயக்கப்படும்.

9 ரயில் நிலையங்களில் உதவி மையம்: நீட் தோ்வை எழுதச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், பெரம்பூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூா் மற்றும் காட்பாடி ஆகிய 9 முக்கிய ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

உதவி மையங்கள் மூலம் ரயில்கள் விவரம், உள்ளூா் போக்குவரத்து வசதிகள், தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கான வழிகள் ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.