சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

போர் விமான விபத்து சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே

இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக் கொண்ட சம்பவத்தில் விமானி ஒருவர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2023, 7:50 pm IST

இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக் கொண்ட சம்பவத்தில் விமானி ஒருவர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 விமானிகளும் விரைவில் நலம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா என்ற இடத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் - சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 - நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒரு விமானி பலியானார்.

 இன்று காலை இரு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டபோது, விமானம் விபத்துக்குள்ளானதாகவும், ஒரு விமானத்திலிருந்து இரண்டு விமானிகள் வெளியே குதித்து உயிர்பிழைத்ததாகவும் மற்றொரு விமானியின் உடல் பாகங்கள் சம்பவ இடத்தில் இருந்து கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகோய் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய விமானிகள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக் கொண்ட சம்பவத்தில் விமானி ஒருவர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான துரதிருஷ்டமான செய்தி மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

உயிர்த்தியாகம் செய்த விமானிக்கு எனது வணக்கங்கள். நாங்களும், எங்களது பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்துக்காக இருக்கிறோம். இந்த விபத்தில் காயமடைந்துள்ள 2 விமானிகள் விரைவில் நலம் பெற நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.