ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரை முழு மாநிலமாக மாற்றுவதுடன் அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இந்த ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அரசியல் சார்ந்த விஷயங்களை ஆலோசிக்காது. ஏனென்றால், அதற்கு முன்னதாக ஆலோசிக்கப்பட உள்ள விஷயங்கள் நிறைய உள்ளன.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் தினசரிப் பிரச்னைகள் மற்றும் பெரிய அளவில் கவனம் செலுத்தக் கூடிய பிரச்னைகள் என இரண்டு விதமான விஷயங்களும் உள்ளன. ராகுல் காந்தி இந்த பிரச்னைகளை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் நம்புகிறது. ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கமாகும். ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸின் இரண்டாவது நோக்கம் ஜம்மு-காஷ்மீரை ஒரு முழுமையடைந்த மாநிலமாக மாற்றுவது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஜூலை 1 முதல் தடை!

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


