மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஜூலை 1 முதல் தடை!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்தத் தடை தீவிரமாக செயல்படுத்தப்படுவது குறித்து...

News image

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்தத் தடை - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 10:03 am IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் மீதான தடை தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை தீவிரமாக செயல்படுத்தவிருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலினுள்ளே பக்தர்கள் செல்போன் பயன்படுத்த 2022 நவம்பர் 14 ஆம் தேதியில் தடை விதித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்துவதற்காக ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தீவிரமாக செயல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும்போது தரிசன வரிசை, விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் அனைவரும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

ஆகையால், பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே செல்போன் பாதுகாப்பு வைப்பகங்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோயிலினுள் நுழையும்போது பரிசோதனையில் பக்தர்களிடம் செல்போன்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, நீதிமன்ற உத்தரவின்படி கோயிலுக்குள் செல்போன் தடை விதிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த பக்தர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Summary

Complete ban on carrying mobile phones inside the Thiruchendur Murugan Temple from July 1st

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.