ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரை முழு மாநிலமாக மாற்றுவதுடன் அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இந்த ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அரசியல் சார்ந்த விஷயங்களை ஆலோசிக்காது. ஏனென்றால், அதற்கு முன்னதாக ஆலோசிக்கப்பட உள்ள விஷயங்கள் நிறைய உள்ளன.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் தினசரிப் பிரச்னைகள் மற்றும் பெரிய அளவில் கவனம் செலுத்தக் கூடிய பிரச்னைகள் என இரண்டு விதமான விஷயங்களும் உள்ளன. ராகுல் காந்தி இந்த பிரச்னைகளை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் நம்புகிறது. ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கமாகும். ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸின் இரண்டாவது நோக்கம் ஜம்மு-காஷ்மீரை ஒரு முழுமையடைந்த மாநிலமாக மாற்றுவது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்

இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

