ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரை முழு மாநிலமாக மாற்றுவதுடன் அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இந்த ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அரசியல் சார்ந்த விஷயங்களை ஆலோசிக்காது. ஏனென்றால், அதற்கு முன்னதாக ஆலோசிக்கப்பட உள்ள விஷயங்கள் நிறைய உள்ளன.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் தினசரிப் பிரச்னைகள் மற்றும் பெரிய அளவில் கவனம் செலுத்தக் கூடிய பிரச்னைகள் என இரண்டு விதமான விஷயங்களும் உள்ளன. ராகுல் காந்தி இந்த பிரச்னைகளை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் நம்புகிறது. ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கமாகும். ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸின் இரண்டாவது நோக்கம் ஜம்மு-காஷ்மீரை ஒரு முழுமையடைந்த மாநிலமாக மாற்றுவது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த வெற்றிலைப் பாக்கு துண்டுகள் அகற்றம்

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்!

ஈரோடு மண்டல அரசுப் பேருந்துகளில் 52.20 கோடி முறை மகளிா் இலவசப் பயணம்

மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

