கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நிதீஷ் குமாருடன் எதிர்காலத்தில் கூட்டணி இல்லை: பாஜக

நிதீஷ் குமாருடன் எதிர்காலத்தில் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர் சுஷில் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :29 ஜனவரி 2023, 1:50 pm

DIN

நிதீஷ் குமாருடன் எதிர்காலத்தில் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர் சுஷில் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தர்பங்காவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் நிதீஷ் குமார் அல்லது ஜேடியுவுடன் கூட்டணி இருக்காது என்பதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து மூத்த தலைவர்களும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

அவர் பாஜகவுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, மக்கள் மற்றும் பிரதமர் மோடி வைத்த நம்பிக்கைக்கும் துரோகம் இழைத்துள்ளார். 

நிதீஷ் குமார் தற்போது பிரச்னைக்குரியவராக மாறிவிட்டார். அவரது வாக்குகளை மாற்றும் திறன் முடிந்துவிட்டது. கடந்த பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ததால்தான் 44 இடங்களை அவரால் வெல்ல முடிந்தது. இல்லையெனில் அவர் 15 இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார். நிதீஷ் குமார் இப்போது பலமற்றவர்.

பாஜகவில் இருந்தாலும் சரி, ஆர்ஜேடியில் இருந்தாலும் சரி, அவரால் இனி வாக்குகளை பெற முடியாது. அவர் கூட்டணியில் இருந்து விலகியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இனி 2025-ல் நடக்கவிருக்கும் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சிக்கு வரலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.