நாளை தாக்கலாகிறது பொருளாதார ஆய்வறிக்கை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்குல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, நாடாளுமன்றத்தில் நாளை பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். 
நாளை தாக்கலாகிறது பொருளாதார ஆய்வறிக்கை
நாளை தாக்கலாகிறது பொருளாதார ஆய்வறிக்கை
Published on
Updated on
1 min read


புது தில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்குல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, நாடாளுமன்றத்தில் நாளை பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-இல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. 
தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவிருக்கிறாா். அவரது உரையைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. நாளைய தினம் 11 மணியளவில் நாடாளுமன்றம் கூடுகிறது.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையானது இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி ஆனந்த நாகேஸ்வரன் அவர்களால் நாளை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

பொருளாதார ஆய்வறிகை
பொருளாதார ஆய்வறிக்கை என்பது நாட்டின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை (ரிப்போர்ட் கார்டு). இது மத்திய நிதியமைச்சரால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

நாட்டின் பொருளாதார நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்த பொருளாதார ஆய்வறிக்கை விரிவாகக் கொண்டிருக்கும். பொருளாதார ஆய்வு, தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த துறைசார் கண்ணோட்டங்கள், கருத்துகளை கொண்டிருக்கும்.

பொது பட்ஜெட்

2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுவாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com