47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜாதி அமைப்பை மறுவகைப்படுத்தக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இந்தியாவில் ஜாதி அமைப்பை மறுவகைப்படுத்துவதற்கு கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
Updated On :4 ஜூலை 2023, 7:09 pm

DIN

இந்தியாவில் ஜாதி அமைப்பை மறுவகைப்படுத்துவதற்கு கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக சச்சின் குப்தா என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்த பொது நல மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘மனுதாரா் தாக்கல் செய்ததைப் போன்ற பொது நல மனுக்கள், நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவதாகும்’ என்றாா்.

இதையடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனா். உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் அபராத தொகையை செலுத்தவும் அவா்கள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.