கோஹிமா-திமாபுர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்களை, நிலச்சரிவு ஏற்பட்டதில் உருண்டு வந்த பாறை சுக்குநூறாக்கிய விடியோ வெளியாகியிருக்கிறது.
நாகாலாந்து மாநிலம் சுமௌகேடிமா மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நேரிட்டுள்ளது. அதன் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏஎன்ஐயில் பகிரப்பட்டிருக்கும் அந்த விடியோவில், தேசிய நெடுஞ்சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன் பின் பின்றாக சிகப்பு விளக்குகளை எரியவிட்டபடி காத்திருக்கின்றன. சாலையில் நேரிட்ட நிலச்சரிவு காரணமாக போவதற்கு வழியில்லாமல் வாகனங்கள் நின்று கொண்டிருந்த போது, கண் இமைக்கும் நேரத்தில், மலையிலிருந்து உருண்டு வந்த பெரும்பாறை ஒன்று, கார்கள் மீது மோதியதில், கார்கள் சுக்குநூறாகின.
இந்த சம்பவம் அனைத்தும், அந்த காரின் பின்னால் நின்றிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் இரண்டு பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். ஒருவர் காருக்குள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாகவும், அவரை மீட்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டது ஏன்?

திருவாரூா், திருக்குவளை பகுதியில் கோடைமழை

மத்திய பல்கலை.யில் யுசிஜி நெட் தோ்வுக்கான கருத்தரங்கம்

நல்ல மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


