கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நாகாலாந்தில் கார்களை நொறுக்கிய பாறை.. பதற வைக்கும் விடியோ

கோஹிமா-திமாபுர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்களை, நிலச்சரிவு ஏற்பட்டதில் உருண்டு வந்த பாறை சுக்குநூறாக்கிய விடியோ வெளியாகியிருக்கிறது.

News image
Updated On :5 ஜூலை 2023, 11:53 am IST


கோஹிமா-திமாபுர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்களை, நிலச்சரிவு ஏற்பட்டதில் உருண்டு வந்த பாறை சுக்குநூறாக்கிய விடியோ வெளியாகியிருக்கிறது.

நாகாலாந்து மாநிலம் சுமௌகேடிமா மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நேரிட்டுள்ளது. அதன் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐயில் பகிரப்பட்டிருக்கும் அந்த விடியோவில், தேசிய நெடுஞ்சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன் பின் பின்றாக சிகப்பு விளக்குகளை எரியவிட்டபடி காத்திருக்கின்றன. சாலையில் நேரிட்ட நிலச்சரிவு காரணமாக போவதற்கு வழியில்லாமல் வாகனங்கள் நின்று கொண்டிருந்த போது, கண் இமைக்கும் நேரத்தில், மலையிலிருந்து உருண்டு வந்த பெரும்பாறை ஒன்று, கார்கள் மீது மோதியதில், கார்கள் சுக்குநூறாகின.

இந்த சம்பவம் அனைத்தும், அந்த காரின் பின்னால் நின்றிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் இரண்டு பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். ஒருவர் காருக்குள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாகவும், அவரை மீட்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.