ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
கடந்த 2008 மற்றும் 2019ஆம் ஆண்டில் சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து சந்திராயன் -3 விண்கலம் உருவாக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது.
நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோடாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுத்தளத்துக்கு சென்றடைந்தது. மேலும் சந்திராயனை ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.