சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பல்கலைக்கழகங்கள் உடன் இணைந்து பஜாஜ் ஆட்டோ பயிற்சி மையங்களை அமைக்க முடிவு!

சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், நேரடி அனுபவத்தைப் பெறக்கூடிய வகையில் பயிற்சி மையங்களை அமைக்க பஜாஜ் ஆட்டோ தெரிவித்தது.

News image
Updated On :11 ஜூலை 2023, 6:46 pm IST

மும்பை: சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், நேரடி அனுபவத்தைப் பெறக்கூடிய வகையில் பயிற்சி மையங்களை அமைக்க இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்தது.

இந்த பயிற்சி மையங்கள் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு மேம்பட்ட திறன் பயிற்சி வழப்படும். இது உற்பத்தித் துறையில் உள்ள திறன் இடைவெளியை நிவர்த்தி செய்ய உதவும் என்று பஜாஜ் ஆட்டோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ பயிற்சி மையங்களுக்கு உலகெங்கிலுமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை வழங்கும் வேளையில், இந்த திட்டத்திற்கான செயல்பாடுகளுக்கும் நிதியளிக்கும்.

மெக்கட்ரானிக்ஸ், மோஷன் கன்ட்ரோல் மற்றும் சென்சார் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மற்றும் தொழில்துறை 4.0 மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி ஆகிய நான்கு முக்கிய தொகுதிகளில் இந்த பயிற்சி கவனம் செலுத்தும்.

தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் மாற்றங்களால், இளைஞர்களை வேலைவாய்ப்பிற்கு தயார்படுத்துவதில் கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் நோக்கத்தில் பாரம்பரியத்துடன், இந்த இடைவெளியைக் குறைக்க உறுதிபூண்டுள்ள எங்கள் முதன்மை சிஎஸ்ஆர் திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம் என்றார் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநரான ராஜீவ் பஜாஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.