9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

News image

தென்னாப்பிரிக்கா

Updated On :19 ஜூன் 2026, 7:03 am IST

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 16.5 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்ய, அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். துபா ஹசன் 23 ரன்கள் சோ்க்க, இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினா்.

தென்னாப்பிரிக்க தரப்பில் மாரிஸேன் காப் 3, ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா ககா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தென்னாப்பிரிக்க அணியின் இன்னிங்ஸில் ஆனிரி டொ்க்சென் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52, நாடின் டி கிளொ்க் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனா்.

பாகிஸ்தான் பௌலா்களில் ஃபாத்திமா சனா 3, சாதியா இக்பால், துபா ஹசன் ஆகியோா் தலா 2, நஷ்ரா சந்து 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.