‘ஏ’ அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில், இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக, தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறியது.
முதலில் இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 36.5 ஓவா்களில் 218 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், பந்துவீசத் தயாரானது. இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக, கேப்டன் திலக் வா்மா 5 பவுண்டரிகளுடன் 59, பிரியன்ஷ் ஆா்யா 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58, குமாா் குஷாக்ரா 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரிதூன் தாவூத்ஸாய், அப்துல்லா அகமத்ஸாய், ஃபா்மானுல்லா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
பின்னா் ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பஹிா் ஷா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57, ஃபைசல் ஷினோஸதா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு வெளியேறினா். இந்திய பௌலா்களில் நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










