சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சந்திரயான்-3: செயல் திட்ட ஒத்திகை நிறைவு

சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான செயல் திட்ட ஒத்திகையை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது.அதற்கு அடுத்தகட்டமாக கவுன்ட் டவுன் தொடங்கும் பணிகளும், எரிபொருள் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு

News image
சந்திராயன் 3
Updated On :11 ஜூலை 2023, 6:53 pm

DIN

சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான செயல் திட்ட ஒத்திகையை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது.அதற்கு அடுத்தகட்டமாக கவுன்ட் டவுன் தொடங்கும் பணிகளும், எரிபொருள் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனா். இதற்கிடையே சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்கான செயல் திட்ட ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

அந்த ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்ாகவும், விண்ணில் சந்திரயான் - 3 விண்கலத்தை செலுத்துவதற்கான கடைசி நிலையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,900 கிலோ எடை கொண்டது. இதில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சந்திரயான் -2 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டா், ரோவா் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் 14 நாள்களுக்கு நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.