கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த மூன்று நாள்களாகத் தடைப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் பாந்தா சௌக் அடிப்படை முகாமில் இருந்து இன்று காலை பம் பம் போலே, ஹர ஹர மகாதேவ் என்ற கோஷத்துடன் உற்சாகமாக பக்தர்கள் குழு புறப்பட்டுச் சென்றது.
கடந்த ஜூலை 7-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் கனமழையை தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வந்ததையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாள்களாக நிறுத்தப்பட்ட யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.
அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், யாத்திரை தொடங்கி இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.