யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாசல்: விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருள்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், வட மாநிலங்களை கனமழையும், வெள்ளமும் புரட்டிப்போட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2023, 12:50 pm

DIN

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், வட மாநிலங்களை கனமழையும், வெள்ளமும் புரட்டிப்போட்டுள்ளது.

வட மாநிலங்களில் ஹிமாசலப்பிரதேசமும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தரை வழியாக அணுக முடியாத பல்வேறு பகுதிகளில், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

குள்ளு துணை ஆணையர் அஷுதோஷ் கார்க் கூறுகையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தாமதமாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தற்போது பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. முக்கியமாக, கேரளம், கா்நாடகம், வடமாநிலங்களான தில்லி, ஹிமாசல், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால், யமுனை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கனமழை பெய்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் குளம் போலத் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வசிப்பிடங்களிலும் மழைநீா் தேங்கியுள்ளது. கனமழை சூழலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை உள்ளூா் அதிகாரிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

ஹிமாசலில் நிலச்சரிவு
கனமழை காரணமாக ஹிமாசலின் சிம்லா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் போ் உயிரிழந்தனா். மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோா் பல இடங்களில் சிக்கியுள்ளனா். அவா்களை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புது தில்லியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை தலைநகர் சந்திக்காததொரு வெள்ளப்பெருக்கில் நகரமே சிக்கித் தவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.