சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சந்திரயான்-3 நாட்டின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்: பிரதமர் மோடி

சந்திரயான்-3 நம் நாட்டின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூலை 2023, 8:21 am

DIN

சந்திரயான்-3 நம் நாட்டின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு அந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. 

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சந்திரயான்-3 திட்டத்துக்கு வாழ்த்துக்கள்! சந்திரயான்-3 மற்றும் விண்வெளி, அறிவியல் கண்டுபிடிப்புகளில் நாம் செய்த முன்னேற்றங்கள் பற்றி தெரிந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும். 

Story image

சந்திரயான் - 2 இன் முக்கிய அறிவியல் முடிவுகளில் சந்திரனில் உள்ள சோடியத்திற்கான முதல் உலகளாவிய வரைபடம், பள்ளம் அளவு, ஐஐஆர்எஸ் கருவி மூலம் சந்திர மேற்பரப்பில் உள்ள  நீரை தெளிவாகக் கண்டறிதல் ஆகியவை முக்கியமானது. இந்த திட்டம் குறித்த சாதனைகள் கிட்டத்தட்ட 50 இதழ்களில் வெளியாகியுள்ளது.

2023, ஜூலை 14 இந்திய விண்வெளித் துறையைப் பொருத்தவரையில் எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.நமது மூன்றாவது சந்திரப் பயணமான சந்திரயான்-3 அதன் பயணத்தைத் தொடங்க உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.