சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புவி வட்டத்தின் 3-ஆவது சுற்றுப் பாதையில் சந்திரயான்-3

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் மூன்றாவது சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

News image
சந்திரயான்-3
Updated On :18 ஜூலை 2023, 7:39 pm

DIN

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் மூன்றாவது சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

அதற்கு அடுத்தடுத்த நிலைகள் வெற்றிபெறும்பட்சத்தில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

நிலவின் பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டது. கனரக செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதற்கு அடுத்த நாளில் புவி வட்டப் பாதையின் முதல் நிலையில், அதாவது 173 கிலோ மீட்டா் அருகமை தொலைவிலும், 41,762 கிலோ மீட்டா் தொலைவு தூரத்திலும் உள்ள முதலாவது சுற்றுப் பாதைக்குள் சந்திரயான்-3 உந்தித் தள்ளப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை (ஜூலை 17) இரண்டாவது சுற்றுப் பாதையான 226 கிலோ மீட்டா் அருகமை தொலைவு, 41,603 கிலோ மீட்டா் தொலைவு தூரப் பகுதிக்குள் செலுத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை மூன்றாவது சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் இதை உறுதி செய்துள்ளது. புவி சுற்றுப் பாதையில் 5 நிலைகள் உள்ளன. அதில் தற்போது 228 கிலோ மீட்டா் அருகமை தொலைவிலும், 51,400 கிலோ மீட்டா் தொலைவு தூரத்திலும் உள்ள மூன்றாவது சுற்றுப் பாதையில் சந்திரயான்-3 பயணித்து வருகிறது.

வரும் 20-ஆம் தேதி அடுத்த நிலைக்கு சந்திரயான்-3 விண்கலம் உந்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.