விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாம் வெள்ளத்துக்கு 8 பேர் பலி: 1 லட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2023, 10:19 am

அசாமில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பார்பட்டா, பிஸ்வநாத், போங்கைகான், சிராங், டர்ராங், தமாஜி, டிப்ருகார், கோலகத், கம்ரூப், மஜுடில, மோரிகான், நாகோன், நால்பரி, சிவசாகர் மற்றும் சோனிட்பூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,11259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கோலகாட், சிவசாகர் மற்றும் தமாஜி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

Story image

சிவசாகரில் உள்ள டிக்கோ நதி, டிசாங் மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய நதிகள் அபாய அளவை தாண்டிய பாய்கின்றன. 

மொத்தம் 91,797 விலங்குகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக சுமார் 3,653 ஹெக்டேருக்கும் அதிகமான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

மேலும் ஒன்பது மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவை சேதமாகியுள்ளன. 17 மாவட்டங்களில் 32 வருவாய் வட்டங்களில் 441 கிராமங்களை வெள்ளம் பாதித்துள்ளது. மாநிலத்தில் 85 நிவாரண முகாம்களில் 3,152 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.