இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் சசி பஞ்சா கூறியதாவது: மால்டா சம்பவத்தில் அரசியலாக்குவதற்கான தேவையே இல்லை. மேற்கு வங்கத்தில் நடந்துள்ள சம்பவம் திருட்டு தொடர்பானது. சந்தையில் இருந்து இரண்டு பெண்கள் திருட முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டு சந்தையில் இருந்த பெண்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்களைத் தாக்கியுள்ளனர். இருப்பினும், காவல் துறை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய அவசியமில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நாங்களாகவே முன் வந்து நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.