கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வந்தே பாரத் மீது கல்வீசியதால் ரூ.55 லட்சம் இழப்பு!

வந்தே பாரத் ரயில்கள் மீது பல்வேறு கல்வீச்சு தாக்குதலால் ரயில்வே துறைக்கு ரூ. 55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2023, 4:24 pm

DIN

வந்தே பாரத் ரயில்கள் மீது பல்வேறு கல்வீச்சு தாக்குதலால் ரயில்வே துறைக்கு ரூ. 55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 50 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கல் மீது அவ்வப்போது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்துவதால் ரயிலின் கதவுகளும், ஜன்னல்களும் சேதமடைகின்றன.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதில்:

“வந்தே பாரத் ரயில்கள் மீது கடந்த 2019 முதல் 2023 ஜூன் மாதம் வரை நடத்தப்பட்டு கல்வீச்சு சம்பவத்தால் ரயில்வேவுக்கு ரூ.55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 151 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் எந்தவொரு பயணிகளும் காயமடையவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.