கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவையில் நீடிக்கும் அமளி!

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலங்களவையிலும் தொடர் அமளி நிலவி வருகின்றது. 

News image
Updated On :26 ஜூலை 2023, 5:58 am

DIN

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலங்களவையிலும் தொடர் அமளி நிலவி வருகின்றது. 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள்  அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாளான இன்று நாடாளுமன்றத்தின் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவை பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் என மக்களவையின் சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

மணிப்பூா் விவகாரம் குறித்து அரசு மற்றும் எதிா்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை நடத்திய சமரச ஒருங்கிணைப்புக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.