தெலங்கானாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வட மாநிலங்களான மகாராஷ்டிரம், உ.பி., ம.பி., ஹிமாசல், உத்தரகண்ட், வடக்கு ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லட்சுமி தேவி பட்டையில் 65 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
மேலும் ஜெயசங்கர் மாவட்டம் சித்தியாலில் 62 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்பூர் மண்டலம் சேல்பூரில் 48 செ.மீ., ரெகோண்டாவில் 47 செ.மீ. மழை பொழிந்துள்ளது.
எனவே, தெலங்கானா மாநிலத்தின் 20 இடங்களில் தலா 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...