மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரின் தெலங்கானா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் பாஜக செய்தித் தொடர்பாளர் என்.பி.சுபாஷ் வெளியிட்ட அறிக்கையில்,
தவிர்க்கமுடியாத காரணங்களால் ஜூலை 29-ம் தேதி ஷாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரித்தார்.
இதற்கிடையில், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான மல்லு ரவி கூறுகையில்,
கனமழை காரணமாக கொல்லப்பூரில் ஜூலை 30ல் பிரியங்கா காந்தி வத்ரா பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா முன்னிலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணாராவ் முறையாக காங்கிரஸில் சேர இருந்தார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் தெலங்கானாவுக்கான கட்சியின் மகிளா பிரகடத்தை வத்ரா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மாநிலத்தில் ஜூலை 22 முதல் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் வியாழக்கிழமை தொடர்ந்து பெய்து கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.