தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை நடத்துகிறார். 

News image
Updated On :5 ஜூன் 2023, 3:13 am

DIN

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை நடத்துகிறார். 

கராக்பூரில் விசாரணை நடத்தும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் விபத்து பற்றி மக்கள் தகவல் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து இன்றும் நாளையும் விசாரணை நடத்தும் தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பின்னர் அதுதொடர்பாக அறிக்கை அளிக்க உள்ளார்.

இதனிடையே ஒடிஸாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

அதேசமயம் ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று இயக்கப்படுகிறது.  காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.45 மணிக்கு தாமதமாக செல்கிறது.

ஒடிஸா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹௌரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.