கியூபாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டு நாள் பயணமாக இன்று கியூபாவுக்கு வருகை தந்துள்ளார். 
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டு நாள் பயணமாக இன்று கியூபாவுக்கு வருகை தந்துள்ளார். 

முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்காவின் நியூயார்க்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலையில், இன்று ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்டி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். 

கேரள முதல்வர் மற்றும் அவரது குழுவினரை ஹவானாவின் துணை ஆளுநர், கியூபாவுக்கான இந்தியத் தூதர் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். 

இரண்டு நாளும் ஹவானாவில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். 

மேலும், பல்வேறு முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் போது ஜோஸ் மார்டி தேசிய நினைவுச்சின்னம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர் பார்வையிடுகிறார். 

முதல்வருடன் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், திட்டமிடல் வாரிய துணைத் தலைவர் வி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com