இந்திய உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின்(ரா) புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது செயலாளராக இருக்கும் சமந்த் குமார் கோயலின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அமைச்சரவை செயலகத்தின் தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்புச் செயலாளராக இருக்கும் ரவி சின்ஹாவை நியமித்துள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியன் 2 ரிலீஸ் தேதி குறித்து தகவல்!
அடுத்த 2 ஆண்டுகள் அல்லது மறுஅறிவிப்பு வெளியாகும் வரை ரா அமைப்பின் செயலாளராக ரவி சின்ஹா தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.