தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

தில்லியில் உள்ள ஹவுஸ் காஸில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு செய்தார். 

News image
Updated On :20 ஜூன் 2023, 7:38 am

DIN

தில்லியில் உள்ள ஹவுஸ் காஸில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு செய்தார். 

ஒடிசா மாநிலத் தலைநகரின் புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் புரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஜெகந்நாதருக்கு கோலாகலமாக யாத்திரை நிகழ்த்தப்படுகிறது. 

அதன்படி, இந்தாண்டுக்கான ரத யாத்திரை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. பல்வேறு ஆச்சரியங்கள் அடங்கிய இக்கோயிலில் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றது. ஒன்பது நாள்கள் நடைபெறும் தேர்த் திருவிழாவை குண்டிச யாத்ரா என்று அழைக்கப்படுகிறது. 

Story image

ஒடிசாவின் ஜெகந்நாதர் ஆலயத்தில் இன்று அதிகாலை தொடங்கிய ரத யாத்திரையில் தேரை வடம் பிடித்து இழுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலின் முன் திரண்டிருந்தனர். 

விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஒடிசா முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்தில் இன்று காலை வழிபாடு செய்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.