அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள்: குடியரசுத் தலைவர் முர்மு

அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள்: குடியரசுத் தலைவர் முர்மு

அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 
Published on

அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்தாண்டு 9-வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

யோகா நமது நாகரிகத்தின் பெரிய சாதனைகளில் ஒன்றாகும். மனிதக்குலத்திற்கு இந்தியாவின் பெரும் பரிசு யோகா. இது,  உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்துகிறது. 

மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன் சக்தியை நீங்களே உணர்வீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் யோகா செய்யும் படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com