பாஜக வரலாற்றை மாற்ற நினைக்கிறது. ஆனால், நாங்கள் வரலாறு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம். பாஜகவுக்கு எதிராக பேசும் தலைவர்களுக்கு எதிராக அராஜகம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக பேசும் தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை அச்சுறுத்த அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் சாதாரண மக்கள், வேலைவாய்ப்பின்மை, தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள், பெண்கள் குறித்து கவலைப்படத் தயாராக இல்லை. இந்தியப் பொருளாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது என்றார்.