பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கேரளத்திற்கு வருகை தந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்து அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நாட்டவும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று வருகிறார். இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு பாஜகவினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து ஜெ.பி. நட்டா, இன்று நண்பகல் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகிறார்.
மேலும் இந்த பொதுக்கூட்டம் அடுத்த மக்களவைத் தேர்தலுக்குமானதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | மணிப்பூர் வன்முறை: பிரதமர் மோடி ஆலோசனை