தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைத்தார்.
இந்நிலையில், வருகின்ற ஜூலை 3-வது வாரம் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாள்களில் மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது, மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.