மணிப்பூரில் காங்கிரஸ் போராட்டம்! ஹெலிகாப்டரில் செல்கிறார் ராகுல் காந்தி!!

மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டம்
மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டம்

மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த மாதம் தொடக்கம் முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோா் இந்த வன்முறையில் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

மணிப்பூரில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த பாஜக அரசும் பிரதமர் மோடியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். தில்லியில் இருந்து இம்பால் விமான நிலையம் வந்தடைந்த அவர், பிஷ்ணுபூர் பகுதிக்குச் சென்றார். ஆனால், காவல்துறையினர் ராகுல் காந்தியின் வாகனத்தைத் தடுத்தி நிறுத்தினர். வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. 

இதனால், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராகுல் காந்தியை பார்க்க காத்துக்கொண்டிருந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து வருகின்றனர். 

ராகுல் காந்தி மீண்டும் இம்பால் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்வேறு நிவாரண முகாம்களுக்குச் செல்லவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com