மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக - என்டிபிபி கூட்டணி 

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து பேரவைக்கு நடந்த தேர்தலில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2023, 11:46 am

DIN

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து பேரவைக்கு நடந்த தேர்தலில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, இந்தக் கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம், இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியிருக்கிறது.

பாஜக வேட்பாளர் பஷங்மோங்பா 5,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

நாகாலாந்து மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்க, நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேச்சை உள்ளிட்ட இதர கட்சிகள் 22 இடங்களில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி இதுவரை எந்தத் தொகுதியிலும் முன்னிலையில் இல்லை என்று களநிலவரம் தெரிவிக்கிறது.

தேர்தலில் பல முனை போட்டி நிலவிய நிலையில், 16 சுயேச்சைகளும் களத்தில் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.