கேரளத்தில் மார்ச் 9-ல் தொடங்குகிறது எஸ்எஸ்எல்சி தேர்வு

கேரளத்தில் மார்ச் 9 ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தொடங்கும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கேரளத்தில் மார்ச் 9 ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தொடங்கும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த ஆண்டு தேர்வை 4,19,554 பேர் எழுதுகின்றனர். 

அரசு உதவி பெறும் பிரிவில் 1,421 தேர்வு மையங்களும், உதவி பெறாத மண்டலத்தில் 369 தேர்வு மையங்களும் என மொத்தம் 2,960 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வளைகுடா பகுதியில் 518 மாணவர்களும், லட்சத்தீவில் உள்ள ஒன்பது பள்ளிகளில் 289 மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு எழுதுகின்றனர். 

விடைத்தாள்கள் திருத்தும் பணி 70 முகாம்களில் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் தொடங்கும். மே 2023 இரண்டாவது வாரத்தில் முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com