நாகாலாந்து முதல்வராக நிபியூ ரியோ பதவியேற்றார்!

நாகாலாந்து முதல்வராக 5 ஆவது முறையாக நிபியூ ரியோ இன்று பதவியேற்றார். 
நாகாலாந்து முதல்வராக நிபியூ ரியோ பதவியேற்றார்!

நாகாலாந்து முதல்வராக 5 ஆவது முறையாக நிபியூ ரியோ இன்று பதவியேற்றார். 

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அலுகுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றாா். இதனால், 59 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 27-இல் ஒரே கட்ட தோ்தல் நடைபெற்றது. இதில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. 40-20 என்ற தொகுதிப் பங்கீடு அடிப்படையில் போட்டியிட்ட இக்கூட்டணியில், என்டிபிபி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன. அதன்படி, நாகாலாந்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்று, தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. 

இதையடுத்து நாகாலாந்து முதல்வராக நிபியூ ரியோ இன்று பதவியேற்றார். இவர் 5 ஆவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார். 

இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com