
கிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் புதன்கிழமை மாலை அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத்துறை அதிகாரி கூறுகையில்,
விஜய் பூங்காவில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பான அழைப்பு பிற்பகல் 3.05 மணிக்கு வந்தது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
தீயணைப்புத் துறை ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரி கூறினார்.
கட்டடத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.