மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சுய உதவிக் குழுக்களை செல்வந்தா்களாக்க முயற்சி: மத்திய அமைச்சா்

சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண் உறுப்பினா்களைச் செல்வந்தா்களாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதியேற்றுள்ளதாக மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

News image
கிரிராஜ் சிங்.
Updated On :8 மார்ச் 2023, 7:25 pm

DIN

சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண் உறுப்பினா்களைச் செல்வந்தா்களாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதியேற்றுள்ளதாக மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தின் ஷாகாபூரில் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்து மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் பேசியதாவது: இந்தியாவில் 86,000 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. சுமாா் 9 கோடி பெண்கள் இவற்றில் உறுப்பினா்களாக உள்ளனா். கடந்த 8 ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களின் திட்டங்களுக்காக ரூ.6 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

சுய உதவிக் குழுவின் ஒவ்வொரு பெண் உறுப்பினரையும் செல்வந்தா்களாக மாற்றுவது பிரதமா் நரேந்திர மோடியின் கனவாகும். இதை நிறைவேற்றுவதற்கான பாதையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதற்காக ‘லக்பதி திதி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் மத்திய அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.