சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திகார் ஜெயிலில் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :9 மார்ச் 2023, 6:19 am

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல்  மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணீஷ் சிசோடியா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து மணீஷ் சிசோடியாவிடம் மேலும் விசாரணை செய்யும் பொருட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு இன்று காலை திகார் சிறைக்கு சென்றுள்ளது. சிசோடியாவிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, மணீஷ் சிசோடியாவுக்காக சிம் கார்டு, போன் வாங்கியதாகக் அவரின் தனிச் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ நேற்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.