சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நொய்டாவில் ரூ.14 கோடிக்கு மதுபானம் விற்பனை: என்ன காரணம்?

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் சுமார் 14 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :10 மார்ச் 2023, 9:49 am

DIN

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் சுமார் 14 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த பண்டிகையும் களைக்கட்டாத நிலையில், இந்தாண்டு ஹோலி பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

ஹோலி பண்டிகையையொட்டி மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் சுமார் 4.20 லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேநேரத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் உள்பட 1.35 லட்சம் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்தாண்டு தோராயமாக நாட்டு மதுபானங்கள்(250 மில்லி) 6 லட்சத்துக்கும், வெளிநாட்டு மதுபானங்கள் 75,000 பாட்டில்களும், பீர் பாட்டில்கள் 3 லட்சத்துக்கும் விற்பனை ஆன நிலையில், மொத்த வருமானம் சுமார் ரூ.11.5 கோடியாக இருந்தது. 

இந்நிலையில், இந்தாண்டு கௌம் புத்த நகரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 6, 7 ஆகிய இரு தேதிகளில் மட்டும் மதுபானம் விற்பனையில் அரசுக்கு சுமார் ரூ.14 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

2020ஆம் ஆண்டிற்குப் பிறகு கிடைத்த அதிக வருமானம் இதுவாகும் என்று மாவட்ட கலால் அதிகாரி ராகேஷ் பகதூர் சிங் தெரிவித்தார். நொய்டா மற்றும் கிரேட்டர் நோய்டா முழுவதும் மொத்தம் 549 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. 

ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 8-ஆம் தேதி மதுக்கடைகள் மாநிலம் முழுவதுமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.