விரைவுச் சாலையை தொடங்கி வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் பேசியதாவது: மாநிலத்தின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு என்பது அவசியம். இரட்டை என்ஜின் அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்து வரும் நிலையில் காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எனக்கு குழி தோண்டுவது குறித்து கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். மோடி பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை கட்டமைக்கும் நேரத்தில் காங்கிரஸானது மோடிக்கு குழி தோண்டுவதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மோடி ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் மோடிக்கு குழி தோண்டுவதில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது குறித்து கனவு கண்டு கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. மக்கள் தான் எனக்கான மிகப் பெரிய பாதுகாப்பு அரண்.