நாடாளுமன்றத்தின் 2-ஆவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முா்முவின் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தாா். அதையடுத்து குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு பிரதமா் நரேந்திர மோடி இரு அவைகளிலும் பதிலளித்தாா்.
இதையும் படிக்க | ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது!
பட்ஜெட் மீதான பொது விவாதமும் முதல்கட்ட கூட்டத்தொடரில் நடைபெற்றது. அந்த விவாதங்களுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தார். அதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் 13-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் விவரங்களை மத்திய அமைச்சகங்களும் துறைகளும் ஆய்வு செய்வதற்காக சுமாா் ஒரு மாத இடைவெளி விடப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா். மேலும், நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான 2-ஆவது கூடுதல் மானிய கோரிக்கை மசோதாவையும் அவா் தாக்கல் செய்யவுள்ளாா்.
முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அவையின் வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டு குறித்தும், அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்டவை முதலீடுகளை மேற்கொண்டது தொடா்பாகவும் விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அந்த விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே வேளையில், திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தை பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ளதாக எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
அதே வேளையில், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடுகளில் விமா்சனத்தை முன்வைத்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை பாஜக உள்ளிட்ட ஆளுங்கட்சியினா் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 6-ஆம் தேதி நிறைவடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

சுல்தான் பாடல் வெளியானது!

”கமல்ஹாசனே திமுகவை எதிர்த்து போர்க் கொடி தூக்கிவிட்டார்!” செல்லூர் ராஜு

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம்! எவை?
வீடியோக்கள்

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

