அடுத்து என்ன? நாடாளுமன்ற வளாகத்தில் 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அடுத்து என்ன? நாடாளுமன்ற வளாகத்தில் 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்திக்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு நாள்களாக நாடளுமன்றம் முடங்கியுள்ளன.

அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு நிராகரித்து வருகின்றது.

இந்நிலையில், அதானி விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், திமுகவின் டி.ஆர்.பாலு, மதிமுகவின் வைகோ, சிவசேனை(உத்தவ் அணி) சஞ்சய் ரெளத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தி அனைத்து எம்.பி.க்களிடமும் கையெழுத்து வாங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் பேரணி அல்லது போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com